கவிதை கேட்கும் வசதி

வாழ்த்துக் கவி கேட்க விரும்புபவர்களுக்கு கவிதை தரப்படும். மோருக்குப் பாடிய ஔவைபோல் இந்த ஊருக்கு பாடித்தர சிறு சன்மானம்.

பிறந்த நாள் வாழ்த்து, திருமண வாழ்த்து

இன்னும் பல







Paypal ஊடாக கொடுப்பனவு

தங்கள் விபரங்களை கவிதை தேவைப்படும் சந்தர்ப்பத்தை vajuguru@gmail.com என்ற முகவரிக்கு அறியத்தரவும். இரு வாரங்களுக்குள் கவிதை தங்களுக்கு மின்னஞ்சல் செய்யப்படும். தாங்கள் செய்த சன்மானத்தின் ஸ்கிறின் சொட் பிரதியை இணைக்க மறவாதீர்கள்.



வெள்ளி, ஆகஸ்ட் 10, 2018

வெளிச்சத்தை விற்போம் வாருங்கள்- நிறைவுப் பகுதி

சாதாரணமாக சூரியப்படல்களும் அதற்கான கருவிகளும் மிகவும் விலையானவை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அதன் விலையில்வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது. தவிர அரசாங்கம் சூரிய கலங்களின் அதன்  பாகங்களின் இறக்குமதிக்கு சுங்கவரி அறவிடுவதில்லை. இதனால் சூரியபடல்களை சாதாரணமக்களும் பொருத்தக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதது.

தற்போது வரும் சூரிய படல்கள் வினைத்திறனானவை. ஒளிச்சகத்தியின் ஏறத்தாழ 20 வீதத்தை மின்னாக மாற்றக்கூடியன. ஒளியில்  இருந்து சக்தியை பதிப்பது என்பது இலாபகரமானது.தவிரவும் சூரியபடல்கள் விணகலங்களில் பாவிக்கப்பட்டு அதன்வினைத்திறன் பல ஆண்டுகளுக்கு உள்ளது நிருபிக்கப்பட்டுள்ளது. நாங்கள்  தற்போது பாவிக்கும் எந்த ஒரு மின் சாதனமும் ஆகக்கூடியது 10 ஆண்டுகளைத் தாண்டுவதில்லை. ஆனால் சூரியப்படல்கள் 25 ஆண்டுகால வாழ்வுகொண்டவை. அதாவது முதலாம் வருடத்தில் பாவித்த வினைத்திறனின் 80 வீதமான விளைத்திறன் 25 ஆண்டுகளின் பின்னரும் காணப்படும்.

வீட்டுக் கூரைகளுக்கு மேல் மின்படல்களைப் பொருத்தி அதிலிருந்து மின்னைப் பெறுவதை அரசும் தற்போது ஊக்குவிக்கிறது. இதற்காகக 6 வீத வருட வட்டியில் 5 ஆண்டுகளுக்கு மீளளிக்கும் முகமாக ரூ350000 கடனை பெற்றுக்கொள்ள வசதியுள்ளது.    இந்த பெறுமதியில் ஏறத்தாழ ஒரு சாதாரண வீட்டுக்கு தேவையான 200 அலகுகளை மாதாந்தம் பெற்றுக் கொள்ளலாம்.இந்த  வசதி அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளால் வழங்கப்படுகிறது.( வங்கிகளுடன் கவனமாக குறைந்த வட்டிக்கடனைக் கேட்கவேண்டும் . விசயம் தெரியாதவர்களுக்கு 6 வீதத்திலும் பார்க்கக் கூடிய வட்டிவீதத்தில் 13 அல்லது 14 வீதத்தில் தங்களிடமுள்ள  திட்டத்தை வங்கிகள் தலையில்  கட்டிவிடப் பார்க்கும்.!!!!!)


எமது பாவனைக்கு மேலதிகமாக நாம் அரசாங்கத்துக்கு வழங்கும் ஒவ்வொரு அலகு மின்வாரத்துக்கும் மின்சார சபை ரூ 22 வழங்கும். நாங்கள் பாவித்த மின்சாரத்தையும் நாங்கள் அரசுக்கு வழங்கிய மின்சாரத்தையும் அளக்க இரண்டு மின்மானிகள் வீட்டில் பொருத்தப்படும். இது நெற் அகௌண்டிங் எனப்படும்.


இவ்வாறு பொருத்தப்படும் சூரியப்படல்கள் மின்சார சபையின் மின் இணைப்புடன் தொடுக்கப்படுவதால் கிறிட் ரை (Grid tied) என்று அழைக்கப்படும். அதனால் மின்சாரசபை தனது திருத்த வேலைக்காக மின் இணைப்பை நிறுத்தும் போது சூரியப்படல்களும் தமது உற்பத்தியை நிறுத்தும்.அதாவது மின்சார சபை கரண்ட் இல்லையென்றால் வீட்டிற்கும் கரண்ட் இருக்காது. இந்த ஏற்பாடு மின் திருத்த வேலைகளில் இருக்கும் பணியாளர்களுக்கு எமது  மின் படல்கலால் உற்பத்தியான மின்சாரம் சென்று தாக்கதிருக்க காணப்படுகிறது.

தவிர மின்சாரக் கார்களுக்கு மின்சாரத்தை வழங்குவதன் மூலம் அதிக லாகத்தை பெற்றுக்கொள்ளலாம். உங்கள் வீடு வீதிக்கு அருகிலும் ஒரு வாகனம்தரித்து நிற்கும் வசதியுடன் காணப்பட்டால் அவ்விடத்தில் 15 அம்பியர் வட்ட பிளக் பொயின்ட் ஒன்றை இட்டுவிட்டு உங்கள் வீட்டு அமைவிடத்தை plugshare.com மூலம் காட்டிவிட்டால் மினசார வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனத்தை மின்னேற்ற அவ்விடத்துக்கு வருவார்கள். சிறிய மின்மானி   
( ஏறத்தாழ 4000 பெறுமதியானது) ஒன்றை அந்த  பிளக்பொயின்ட்டுக்கு வரும் மின்சாரத்தை அளக்க பொருத்தினால் ஒரு அலகுக்கு ரூ 70 மூலம் மின்சாரத்தை விற்க முடியும். எனவே உற்பத்தியாகும் ஒவ்வொரு அலகிலும் ஏறத்தாழ ரூ 50 இலாபம்ஈட்ட முடியும். யாழ்ப்பாணத்தில் தற்போது மின்சார கார்கள் அதிகரித்துள்ளன. எனவே இது  எதில்காலத்தில் இலாபம்  வரும் தொழிலாக மாறும். மின்மானி பொருத்த முடியாதோர் மணித்தியாலத்திற்கு ரூ 100 வீதம் பெற்றுக் கொள்ள முடியும்.

சத்திக்கு பெற்றோலையும் மண்ணெண்ணையையும் நம்பி இராமல் மின்சாரத்திற்கு மாறுவது தேகத்திற்கும் தேசத்திற்கும் ஆரோக்கியமானது.


முற்றும்.

பல சூரிய படல் நிறுவனங்கள் காணப்படுகின்றன. எனக்குத் தெரிற்து யாழ்ப்பாணத்தில் இயங்கும்  தமிழர்களுக்குச் சொந்தமான இரு நிறுவனங்களின் வலைப்பின்னலை கீழே இணைத்துள்ளேன். அந்நிறுவனங்களுடன் எந்தவித வர்த்தக தொடர்பும் எனக்கில்லை. ( No conflict of interest)விரும்பியவர்கள் கிளிக் பண்ணி தகவல் அறியலாம்.


http://ecosteem.lk/wordpress/

https://solarpowerlk.com/