கவிதை கேட்கும் வசதி

வாழ்த்துக் கவி கேட்க விரும்புபவர்களுக்கு கவிதை தரப்படும். மோருக்குப் பாடிய ஔவைபோல் இந்த ஊருக்கு பாடித்தர சிறு சன்மானம்.

பிறந்த நாள் வாழ்த்து, திருமண வாழ்த்து

இன்னும் பல







Paypal ஊடாக கொடுப்பனவு

தங்கள் விபரங்களை கவிதை தேவைப்படும் சந்தர்ப்பத்தை vajuguru@gmail.com என்ற முகவரிக்கு அறியத்தரவும். இரு வாரங்களுக்குள் கவிதை தங்களுக்கு மின்னஞ்சல் செய்யப்படும். தாங்கள் செய்த சன்மானத்தின் ஸ்கிறின் சொட் பிரதியை இணைக்க மறவாதீர்கள்.



சனி, ஆகஸ்ட் 04, 2018

வெளிச்சத்தை விற்போம் வாருங்கள் - பகுதி 5

சூரியப் படல்களில் பித்துப் பிடித்திருந்தபோதுதான் கொழும்பில் அந்தக் கண்காட்சி நடந்தது. அதில் காற்றிலிருந்து மின்னை எடுப்பது சூரியப்படல்களிலிருந்து மின்னை எடுப்பது போன்றவற்றை காட்சிப் படுத்தியிருந்தார்கள். அதே போல யாழ்ப்பாணத்தில் நடந்த வர்த்தக கண்காட்சியிலும் சூரியப்படல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இரண்டு கண்காட்சியிலும் ஒரே தன்மை காணப்பட்டது. எல்லாமே யானை விலை குதிரை விலை. ஆனாலும் இருபத்தைந்து வருடங்களுக்கு மின்சாரத்தை பெற்றுக் கொள்ளலாம் அதுவும் இலவசமாக என்ற போது அந்தச் செய்தி இனிப்பாகத்தான் இருந்தது. ஏறத்தாழ 10 வருடங்கள் மின்சாரத்தை காணாத யாழ்ப்பாணத்தானுக்கே ஆன கனவு!

கனவுகளில் வீட்டைக் கட்டியெழுப்பமுடியாதே! அதிலும் வியாபாரிகள் சொல்லும் வார்த்தைகளை மட்டும் நம்பி காரியத்தில் இறங்கமுடியாது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் படிக்காவிட்டாலும் தின்னவேலிச் சந்தைக்குப் போகும்  போது கண்ட வாசகம் மனதை எப்பவுமே தொட்டுச்செல்லும்..மெய்ப்பொருள் காண்பது அறிவு!

அப்படி ஒரு தேடலில் இருந்தபோதுதான் முகப்புத்தகத்தில்  அவர் சிக்கினார். எமது பராயத்தவர். மின்பொறியியலாளராக இருந்தார். முகப்புத்தகத்தில் தான் பாவித்த சூரியப்படல்களையும் காற்றிலிருந்து மின்னெடுக்கும் கருவியையும் படமாகப் போட்டிருந்தார்.

மெய்ப் பொருள் காண்பதற்கு இடம்  கிடைத்துவிட்டது.
 அவரிடம் கண்டறிந்த உண்மைகளை உங்களிடம் பகிர்கிறேன்.

தேவபாடையில் இக்கதை செய்தவர் 
மூவரானவர் தம்முளும் முந்திய 
நாவினர் உரையின்படி நான் தமிழ்ப் 
பாவி.....

அதாவது அவர் சொன்னதைத்தான் நானும் சொல்ல வருகிறேன் ....

சூரிய படல்களில் வருவது நேரோட்டம். பொதுவாக அது 12 வோல்ட் ஆக இருக்கும். அதை 240 வோல்ட்  ஆடலோட்டமாக மாற்றியே வீட்டுக்கு இணைக்க முடியும்.  அதை மாற்றித்தருவது இன்வேட்டர் எனும் கருவி!
 தற்போது ஸ்ரிங் இனடவேட்டர் என்ற கருவியும் மைக்ரோ இன்வேட்டர் என்ற கருவியும் புழக்கத்தில் உள்ளன.

ஸ்ரிங்க் இன்வேட்டர் என்ற கருவி நேரோட்டம் எல்லாவற்றையும் எல்லா சூரிய படல்களிடமும் இருந்து பெற்று அதை நேரோட்டமாக மாற்றும். இது பெரிய பெட்டி போன்று காணப்படும். இது பல்வேறு அளவுகளில் ( எதாரணமாக 3 kw 5 kw 7 kw) போன்ற அளவுகளில் காணப்படும். எமது தேவைக்கு ஏற்றபடி தெரிவு செய்யலாம். ஒப்பீட்டு அளவில் விலை குறைந்தது. ( மைக்ரோ இன்வேட்டருடன் ஒப்பிடும்போது.)
மைக்ரோ இன்வேட்டர் பெயருக்கு தகுந்தாற்போல் சிறியது. சூரிய படல்களுக்கு கீழே பொருத்தப்படுவது. உடனடியாக நேரோட்டத்தை ஆடலோட்டமாக மாற்றித் தருவதால் சகத்தி இழப்பு குறைவு.
( நேரோட்டத்தை மிக நீண்ட தூரத்திற்கு கம்பிகள் மூலம் கடத்தும் போது சத்தி இழப்பு ஏற்படும்.) ஆனால் சற்று விலை கூடியது.

சூரிய படல்களுடன் இன்வேட்டரை இணைப்பது மிக இலகுவானது. தற்போது வரும் படல்கள் பிளக் இணைப்புகளுடன் வருவதால் ஒன்றுடன்ஒன்று சரியாகப் பொருந்தும்படி செருக்கிக் கொள்ள வேண்டியதுதான்.

( மின்சார இணைப்புகள் பொதுவாக இலக்ரிசியன்களால் செயயப்பட வேண்டும். இணைய அறிவுடன் நீங்கள் இணைக்க முனைவது ஆபத்தாக முடியலாம்)


படல்களிடம் பெற்ற மின்சாரத்தை இன்வேட்டர்கள் மூலம் ஆடலோட்டமாக மாற்றிய பின்னர் அதனை வீட்டு இணைப்புடன் இணைக்க முன்னர் இடிமின்னல் தாக்கம் ஏற்படாது இருக்கவும் அதிக அழுத்தம் CEB கரண்டில் வரும்போது படல்களைப் பாதுகாக்கவும் சாதனங்கள் இணைக்கப்படும்.

படல்கள் இன்வேட்டர்கள் மற்றுமு் கருவிகள் இலங்கை மின்சார சபையால் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றுக்கு அமைவாக இருக்கவேண்டும். அவ்வாறு அமையாத சாதனங்களை இணைப்பது சட்டவிரோதமானது. 

சூரியப்படல்கள் அளவு kWp  or Wp எனும் அளவில் குறிக்கப்படும்.அதாவது 250 Wp என்றால் இந்தப்படலில்இருந்து நியம அளவு பிரமாணங்களில் பெறக்கூடிய உச்ச சத்தி 250 வாற்களாகும். 250 Wp அளவுடைய நான்கு படல்கள் இணைக்கப்பட்டால் அது 1 kWp ஐ தரும். நடைமுறையில் பார்க்கும்போது 250 Wp என்பது ஆகக் கூடியது 200 W சத்தியையே தரும்.

சூரிய படல்களின் மின் உற்பத்தியானதுஒளிச் செறிவு ,சூழல் வெப்பநிலை , ஒளிவிழும் சாய்வு என்பவற்றில் தங்கியிருக்கும்.

காலையில் உற்பத்தி குறைவாகவும் மதியத்தில் உற்பத்தி அதிகமாகவும் காணப்படும்.

தற்போது வரும் சாதனங்கள் ஒவ்வொரு மின்படல்களிலிருந்து வரும் சத்தியை கண்காணிக்ககூடிய வசதிகளுடன் வருகின்றன.


எனது படல்களிலிருந்து இன்று விளைந்த சக்தியின் அளவை கீழ்வரும் வரைபில் காணலாம்.


படல்களிலிருந்து வரும் சக்தியின் அளவை முகில்கள் குறைக்கும். ஆனால் மழை பெய்வது நல்லது. ஏனென்றால் படல்களில் படியும் தூசு கழுவப்படும்போது படல்களுக்கு வெல்லும் ஒளியின்அளவு அதிகரிக்கும்.
 ( தூசு படிந்தால் நீரால் கழுவுவுதன் மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்கலாம்.)

இலங்கை பூமியின் வடவரைக்கோளத்தில் இருக்கிறது. எனவே சூரியப்படல்கள் தெற்கு நோக்கி சற்று சாய்ந்து இருந்தால் படல்களில் செங்குத்தாக படும் ஒளி அதிகரிக்கும். அதனால் மின்  உற்பத்தி  அதிகரிக்கும்.


தேடல் தொடரும்.


© வாயுபுத்திரன்.
04.08.2018