தலைப்பை கண்ட உடனையே நீங்கள் சரி உந்தாளும் யாவாரத்திலை இறங்கியிட்டுது எண்டுதான் நினைச்சிருப்பியள். பின்னை நீங்களும் என்னைமாதிரித்தானே இருப்பியள். அவசரக்குடுக்கையள்...பொறுங்கோ நான் சொல்ல வாறதை பொறுமையாக் கேளுங்கோ...
சின்னவகுப்பிலை நீர் காற்று வெப்பம் வெளிச்சம் எல்லாம் இயற்கையானது தூய்மையானது எண்டைல்லாம் படிச்சிருப்பியள். அதிலை தண்ணியை விற்கிற கதை யாரேனும் உங்காலை தீவுப்பக்கம் இருந்துவந்து சொன்னாத்தான் உண்டு. எங்கடை வீட்டுக் கிணறு எந்தளவு ஆழம் எண்டு நீட்டு வயர் போட்டு கலக்கி இறைக்கிற தறுமுவைக்கேட்டாச் சொல்லும். அதிலும் ஊற்று இருக்கு பாருங்கோ சும்மா கடகடவெண்டு ஆறு மாதிரி பெருக்கெடுக்கும். எங்கடை கிணறும் எங்கடைமுன்வீட்டு மனேச்சரின் கிணறும் அப்பித்தான். அம்மிக் குழவியை ஓட்டி ஊற்றை அடைச்சாத்தான் ஒட்ட இறைக்கலாம்...தண்ணியெண்டா தின்னவேலித் தண்ணியும் தோத்துப்போம்...
ம் . அது எல்லாம் அந்தக்காலம்.
இப்ப தண்ணியும் ஒரு இழுவையிலை வற்றிப்போகுது. அதைவிட உவங்கள் தண்ணிக்கே எண்ணை கலந்த கதையை சொன்னாப்பிறகு.....
என் செய்யுறது...நானும் காசுக்குத்தான் தண்ணி வாங்கிறனான்...
1990-1995 காலப்பகுதி..
நாங்கள் பள்ளிக்கூடம் போய் மூளை கீளைகொஞ்சம் கொஞசமாக வளரத்தொடங்கின நேரம்......
சனம் எல்லாம் பொருளாதாரத்தடை கஸ்டம் எண்டெல்லாம் பேக்கதை கதைக்கும் பாருங்கோ....சிங்களவனைத் திட்டுங்கள்... விசர்ச் சனம் ...
சிங்களவன் கடவுள் பாருங்கோ..கடவுள்...
கடவுள் கஸ்டத்தை கொடுத்துத் தான் தடுத்தாட்கொள்ளுறவர் எண்டு அறுபத்து மூன்று நாயனார் கதையும் தெரிஞ்ச சனத்துக்கு விளங்கும்.
உந்தக்கோதாரியிலை விழுந்த கோதம்ப மா இல்லை கண்டியளோ....
மண்ணெண்ணைக்கு தட்டுப்பாடு.. பெற்றோல் இல்லவே இல்லை.
ரயர்இல்லாததிலை வாழைப்பழமா தேய்ந்த ரயிரெல்லாம் சைக்கிளிலை இருக்கும். வாழைப்பழமா இருந்தாலும் ஆணி கீணி ஒண்டும் அதிலை ஏறாது...
ஆணி எல்லாம்தடை பாருங்கோ..தெருவிலை கறள் ஆணிகிடந்தாலும் களவெடுத்துக் கொண்டுபோடுவாங்கள். பேந்தெங்கை வாழைப்பழ டயரிலை ஆணி ஏற....
சைக்கிள் டைனமோவிலை வாற கறண்ட் ஆடலோட்டம் எண்டும் அதை நாலு டயோட் போட்டு நேரோட்டம் ஆக்கலாம் எண்டதும் தெரியும் அதிலை வாற ஹம் சத்தத்தை நாலு பிக்கோ பரட் கொண்டன்சரை போட்டு வெட்டலாம் எண்டதும் லெனினின்ரை அண்ணையும் சுரேஸ் அண்ணையும் சொல்லிதந்து செய்தும் தந்தவை...
போட்டிக்கு ஓட கூப்பிட்டாலும் கட்டை எங்களோடை ஓட வரமாட்டான். அவன்ரை சைக்கிலை இருந்து டைனமோவிலை கரண்ட் வந்து அவன்ரை ரிசாஐ் பென்ரோச் பற்றரி நாலும் மின்னனேற்றப்பட்டுக்கொண்டிருக்கும்....வேகமா ஓடினா பற்றறிகள் பழுதாப்போடும் எண“டு அவனுக்குத் தெரியும். கல்லுண்டாய் காற்று வந்து ஆனைக்கோட்டைக்கே அடிச்சாலும்அவன்ரை சைக்கிள் சீரான மெதுவோட்டம் ஓடும்....
வெளிச்சம் தொடரும்.....
© வாயுபுத்திரன்
05.07.2018
வெளிச்சத்தை விற்போம் வாருங்கள் - பகுதி இரண்டு