கம்பஸ் முடிந்து வேலை கிடைத்து கேகாலையில் வேலைசெய்து கொண்டிருந்தபோது மின்சாரம் பற்றிய கவலையுமில்லை. வாழ்க்கை சுகமாக ஒடிக்கொண்டிருந்தது.
யாழ்ப்பாணத்தக்கு வேலை செய்யச் சென்றபோதுதான் மீண்டும் மின்சாரம் பற்றிய நினைப்பே வந்தது. அதற்கு சனி ஞாயிறு எண்டால் மின்சாரத்தை வெட்டி வைக்கும் மின்சார சபையும் ஒரு காரணம். அவைகள் மரக்கொப்பு வெட்டுறம் ஹை டென்சன் மாபிளிலை காபன் கழுவுறம் எண்டு அரைவாசி நாள் கரண்டை கட் பண்ணிப் போடுவாங்கள்.
மின்சாரத்திலை தீப்பிடிச்ச மாதிரி நிகழ்ச்சி வந்து கொஞ்ச நாளிலே இடம் பிடித்தது. நான் வேலை செய்து கொண்டிருந்த இடத்தின் விரிவுரை மண்டபங்கள் மூன்றாம் மாடியில் இருந்தது. அதற்கு மாணவர்கள் பாண் போறணை எண்டு பெயர் வைத்திருந்தார்கள். மத்தியானம் அதுக்குள்ளை போய்க் குந்தினா அண்டைக்கு குளிச்சமாதிரி வேர்த்து ஒழுகும். மனிசர் நிம்மதியா நித்திரை கொள்ள ஏலாது. கிறீம் ஒவ் த சொசயிட்டி எண்டு அவங்களை எடுத்து வைச்சுக்கொண்டு யாழ்ப்பாண வெயிலில் சீட்வெக்கையிக்கை இருத்தினதிலை எனக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை. அதுக்குள்ளை பெடியளும் சேர்ந்து உதுக்கு ஒரு வழி பண்ண வேண்டும் எண்டு கடிதம் அனுப்பியிருந்தாங்கள்.
கடிதம் சபை விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
உவைக்கு என்ன வேணுமாம். அது அவைத்தலைவர்.
ஒருதரும் ஒரு கதையில்லை.
மௌனம்.
அந்தமண்டபத்துக்கு ஏசியை பூட்டலாந்தானே... நான் திருவாயைத் திறந்தேன்.
ஆட்டிலெறி அடிச்சவுடனை அலேட் ஆகிறமாதிரி எல்லாரும் என்ரை முஞ்சியை தடவினார்கள்.
ஆமாம் ஆமாம் எண்டு தலையாட்டுறதை தவிர வேறேதும் அறியாத அந்த சபையில் வந்து சில மாதங்களே ஆனஒருத்தன் இப்பிடி வாயைதிறப்பான் என ஒருத்தரும் கனவிலையும் நினைக்கேல்லை போலை...
உது உவளவுக்கும் ஏசிபூட்டுறதெண்டா என்னசிலவாகும் எவ்வளவு கரண்ட வேணும் எண்டெல்லாம் எமக்குத் தெரியுமே? அவைத் தலைவரின் சீற்றம் சிறிது எட்டிப் பார்த்தது..
ஓ அதுக்கென்ன... எவ்வளவு காசு சும்மா சிலவளியாம திரும்பிபப்போகுது...முந்திப்படிச்ச ஆக்களிடமிருந்து எவ்வளவு காசு வருகுது. அதுகளை எடுத்து ஏசியையும்அதுக்குகரண்டுக்கு மேலை சோலரையும் பூட்டிவிடாச் சரிதானே... நாங்கள் இனி கிறீன்எனர்ஜியை யோசிக்க வேணும்...
ஏதோ ஒரு பெரிய சாதனையை செய்துவிட் மாதிரி நான் இறும்பூதெய்துவதுக்குள் மல்ரிபரல்இரைஞ்சமாதிரி ...
கொழும்பிலை இருந்து வந்திட்டு பேக்கதை விசர்க் கதை கதையாதையுங்கோ...
கிபிர் வந்து நல்லாய்ப் பதிஞ்சு போட்டது போலிருந்தது...
நானும் விடேல்லை. வாழ்க்கை திறன் படிப்பிச்ச இலங்கஸ்வரன் சேர் நீ எதிர் காலத்திலை லோயராய்த் தான் வருவாயெண்டுதிருவாய் மலர்ந்ததை நினைவில் கொண்டு கீழை இருந்து பிப்ரி கலிபராலை வெடிக்கத் தொடங்கினேன்...
சமர் நீண்டு கொண்ருந்தது..
எல்லாரும் மணிக்கூட்டை பார்த்துக் கொண்டிருந்தனர்.. வழமையா 1 மணிக்கு தொடங்கி 2 மணிக்கு முடியுற கூட்டம் அண்டைக்கு முடியேக்கை 5மணி...
பெண்கள் அணியினர் கண்களால் கெஞ்சத் தொடங்கியிருந்தனர்...
இனி கூட்டம் முடிந்து பிள்ளையளை ஏற்றிக்கொண்டுவந்து கரண்ட் நிற்கமுன்னம் இரவுக்கு சமைக்கவும் வேணும்.
ஆனா அவையளின்ரை கஷ்ட காலம்.. கலியாண கட்டாத ஒன்றும் பேரப்பிள்ளை கண்ட ஒன்றும் வீட்டை வேலை ஒன்றும் இல்லாமல் போறணைக்கு ஏ சி போடுறதை பற்றிபுலம்பிக் கொண்டிருந்தன..
புலம்பல் தொடரும்....
© வாயுபுத்திரன்
26.07.2018