அறிவியல் கழகம் இணுவிலில் இருந்தது. எங்கள் பரிசோதனைகளின் களமாக அது விளங்கியது. அப்போது எங்கள் ஆராய்ச்சி சாம்பலிலிருந்து மின்சாரத்தை தயாரிப்பதாக இருந்தது. ஆண்டு பத்து விஞ்ஞான புத்தக அறிவுடன் யாழ்ப்பாணத்துக்கே சாம்பலிலிருந்து மின்சாரம் வழங்கும் பரிசோதனையில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். சாம்பலுக்குள் இரு பக்கமும் ஈயத்தகடை வைத்தபோது வோல்டோ மீற்றர் அசைவை காட்டியது. உரேக்கா எண்டு கத்த இருந்த நேரத்திலைதான் அந்த ஐந்து சியாமாச் செற்றிகளும் வந்து தாங்கள் கொண்டுவந்த சாமான்களைஎறிந்துபோட்டு ஓடின. சாமான்கள் பெருஞ்சத்தத்துடன் வெடித்தன. எங்கையோ கிட்டடியிலை விழுந்திருக்கோணும். காற்றின் அமுக்கம் அறிவியல் கழகம் வரை வந்து போனது.
எங்கடை ஆராய்ச்சி இடையிலை குழம்பிக் போக சியாமாச் செற்றி மட்டும் காரணமில்லை. மோகன் தன்ரை ஏ எல் படிக்கும் அண்ணனின் இரசாயன புத்தகத்தை வாசித்து வந்தசெய்தியும் தான் காரணம். அதாவது காரத்தில் அல்லது அமிலத்தில் உலோக தகடுகளை வைக்கும்போது மின்னழுத்தவேறுயாடு வரும் என்றதே அது. தவிர வெவ்வேறு உலோகங்களுக்கு வெவ்வேறு அழுத்த வேறுபாடு வரும் எண்டு எழுதியிருந்தது. இன்னொருவகையில் சொல்லப் போனால் நாங்கள் கஷ்டப்பட்டு கண்டுபிடித்ததை ஆரோ ஒருத்தன் நூறு ஆண்டுகளுக்கு முன்னே சொல்லிவிட்டான்...
களைச்சுப்போய் தென்னை மரத்தடியில் இருக்கேக்கதான் சச்சோஅண்ணை அதைக் கொண்டு வந்தார்...
அது ஒரு சிறிய சூரியப் படல்.. விளங்கிற தமிழிலை சொல்லுறதெண்டா கின்ன சோலர் பனல். இப்ப நீங்கள் கையிலை வைச்சுப் பாவிக்கிற 10 .1 டப்பின்ரை அளவு இருக்கும். அந்தப் பனல் நேரடியாக சிறிய ரேப் ரெக்கோடருக்கு கொடுக்கப்பட்டிருந்தது.
வெய்யிலில் வைத்தபோது கசட் பாடியது....கால் வலிக்கும் கை வலிக்கும மாறப் போவதில்லை. எங்கள் கனவு நனவாகு மட்டும் சேசசசசசசா ரரரரப் போாாாவவவதில்லை. முகில் வந்து வெகிச்சம் குறையும் போதெல்லாம் டேப் இழுக்கத் தொடங்கியது.
நாங்கள் சோலரை சின்ன கசியோ மணிக்கூடுகளில் கண்டிருக்கிறோம். ஆனால் இவ்வளவு பெரிய , இரண்டு கைகளையும் மறைக்கக் கூடிய, ஒரு டேப் றைக்கோடரையே பாட வைக்கக் கூடிய பெரிய பனலை நாங்கள் கண்டதில்லை.
கனவு சாம்பலிலிருந்து சூரியக் கலங்களுக்கு தொத்திக் கொண்டது.
கனவுகள் தொடரும்.
©வாயுபுத்திரன்
24.07.2018