
நல்லூரா, உன் கோயில் கொடியேறும் - இந்த
நாட்களிலே திருடருக்கு(தாலிக்) கொடி தேறும்!!
செல்லாத காசெல்லாம் கடலையாகும் - அது
தெரியாத ஆச்சிக்கு வயிறு காயும்!
புரதட்டை அடிக்கேக்கை நோக வேணும் - மணல்
புரள்வதற்கு ஏன் முருகா உருள வேண்டும்?
கோயிலுக்கை வேட்டி சேலை மட்டும் என்றார் - வெறும்
கொள்கையிலை பயனிருக்கா இல்லைஇல்லை!
உன்வீட்டை இடிச்செல்லோ கல்லை வைச்சு
ஒல்லாந்தர் கோட்டை கட்டிப் பார்த்தார் எண்டா
என்வீட்டை இடிச்சவனை என்ன செய்வாய்!
எட பொடியா நீயும் ஓர் இளிச்ச வாய்தான்!
15 08 2010