கவிதை கேட்கும் வசதி

வாழ்த்துக் கவி கேட்க விரும்புபவர்களுக்கு கவிதை தரப்படும். மோருக்குப் பாடிய ஔவைபோல் இந்த ஊருக்கு பாடித்தர சிறு சன்மானம்.

பிறந்த நாள் வாழ்த்து, திருமண வாழ்த்து

இன்னும் பல







Paypal ஊடாக கொடுப்பனவு

தங்கள் விபரங்களை கவிதை தேவைப்படும் சந்தர்ப்பத்தை vajuguru@gmail.com என்ற முகவரிக்கு அறியத்தரவும். இரு வாரங்களுக்குள் கவிதை தங்களுக்கு மின்னஞ்சல் செய்யப்படும். தாங்கள் செய்த சன்மானத்தின் ஸ்கிறின் சொட் பிரதியை இணைக்க மறவாதீர்கள்.



ஞாயிறு, ஆகஸ்ட் 15, 2010

என்ன திருக்கூத்து இது?


நல்லூரா, உன் கோயில் கொடியேறும் - இந்த
நாட்களிலே திருடருக்கு(தாலிக்) கொடி தேறும்!!
செல்லாத காசெல்லாம் கடலையாகும் - அது
தெரியாத ஆச்சிக்கு வயிறு காயும்!

புரதட்டை அடிக்கேக்கை நோக வேணும் - மணல்
புரள்வதற்கு ஏன் முருகா உருள வேண்டும்?
கோயிலுக்கை வேட்டி சேலை மட்டும் என்றார் - வெறும்
கொள்கையிலை பயனிருக்கா இல்லைஇல்லை!

உன்வீட்டை இடிச்செல்லோ கல்லை வைச்சு
ஒல்லாந்தர் கோட்டை கட்டிப் பார்த்தார் எண்டா
என்வீட்டை இடிச்சவனை என்ன செய்வாய்!
எட பொடியா நீயும் ஓர் இளிச்ச வாய்தான்!

15 08 2010