கவிதை கேட்கும் வசதி

வாழ்த்துக் கவி கேட்க விரும்புபவர்களுக்கு கவிதை தரப்படும். மோருக்குப் பாடிய ஔவைபோல் இந்த ஊருக்கு பாடித்தர சிறு சன்மானம்.

பிறந்த நாள் வாழ்த்து, திருமண வாழ்த்து

இன்னும் பல







Paypal ஊடாக கொடுப்பனவு

தங்கள் விபரங்களை கவிதை தேவைப்படும் சந்தர்ப்பத்தை vajuguru@gmail.com என்ற முகவரிக்கு அறியத்தரவும். இரு வாரங்களுக்குள் கவிதை தங்களுக்கு மின்னஞ்சல் செய்யப்படும். தாங்கள் செய்த சன்மானத்தின் ஸ்கிறின் சொட் பிரதியை இணைக்க மறவாதீர்கள்.



வெள்ளி, பிப்ரவரி 26, 2010

பித்துப் பிடிச்சிட்டு எனக்கு!

கட்டிப் பிடிக்கோணும்போல் இருக்கு- அவ
காதைக் கடிக்கணும்போல் இருக்கு!
குட்டி அழைக்கணும்போல் இருக்கு - சும்மா
கூட்டிக் கழிச்சுப் பார்! கணக்கு!

பட்ட கஷ்டங்கள் மறந்து- அந்தப்
பாவைப் பிள்ளையில் இருந்து
மொட்டு மலர்வது போல - காதல்
மூச்சு வருகுது மேலே!

கொட்டும் மழையெனக் கூதல் - அவ
கொவ்வை இதழ்களின் சாரல்
முட்டும் மலைகளில் மேகம் - குளிர்
முன்பனி தூவியே போகும்!

எட்டி நடக்கிறாள் கண்டு - இஞ்சை
ஏக்கத்தை மட்டுமே தந்து
வட்டி ஏறிச்சு மேலும் - கடன்
வந்து நெருக்குதே நாளும்!

நேற்றைய கனவிலே முத்தம் - ஓம்
நிச்சயம் இல்லையே சத்தம்
காற்றுடன் மட்டுமே சுற்றும் -ஒலி
காதலைச் சொல்லுமே நித்தம்!

எப்பத்தான் இறங்குமென் பித்தம்? - எனை
ஏற்றிடு ஏற்றிடு மட்டும்!
அப்பத்தான் மப்பெல்லாம் தீரும் - அன்பு
ஆளுமே வந்து நீர் பாரும்!!!!







வியாழன், பிப்ரவரி 25, 2010

தேவதையின் வரம்!

சுட்ட பற்றிஸ் விற்கும் தேநீர் சாலை- அதை
சுற்றும்போது கண்டன் என்ரை ஆளை!
மொட்டையாக பார்த்த பார்வை நெஞ்சை
மொத்திப் போக வைச்சாஅந்த வஞ்சை!

குந்தியிருந்தா அந்த வாங்கில் மூலை! அவ
குடியிருப்பு ஊரின் எந்த மூலை!?
சொந்தகாரி ஆகிவிட்டு போனா - வலையை
சுழிச்சுப்போட்டு ஓடுமொரு மீனா!

வெட்டியாக வீதிசுற்ற வைச்சா- சும்மா
விளைந்த ஒல்லித் தென்னம் பொச்சா!
கட்டி வெல்லம் தின்பம் என்ற ஆசை!
கடைசியிலை வைச்சா ஒரு பூசை!

அம்மாக்காரி சிரிச்சு மழுப்பிப் போனா
அப்பன்காரன் தேங்காய் உடைச்சார் வீணா!
மம்மல் வேளை வந்த மப்பு ஆச்சு - நானும்
மாட்டிக் கொண்டன் மானம் இப்ப போச்சு!

தேவதைகள் வரங்கொடுக்கும் என்று - மரத்தை
தினமும் வந்து பார்த்து கொண்டு நின்று!
மீதமுள்ள ஆசையெல்லாம் இன்று- உச்சி
மீதுஏறி ஆடும் என்னை கொன்று!