வையத்தில் புயலைக் கண்டோம்
கானத்தினிசையைக் கண்டும் - அதன்
கருத்தினை காற்றில் விட்டோம்.
கடுமையாய்ப் புளுகல் செய்தோம்
கறைகளை மெழுகல் செய்தோம்
படுகிற பாட்டை எல்லாம் - கடவுள்
பார்க்கட்டும் என்று விட்டோம்.
எதிரியும் வளர்வான் உண்மை
என்பதை ஏற்க மறுத்தோம்
புரிதலை தொலைத்து விட்டோம்
புன்னகை புரிதலை விட்டோம்
ஊரெலாம் கேட்டோம் உதவி - எதிரி
உதைக்கிறான் என்றும் அழுதோம்!
நாடுகள் தேடிவந்து மீட்டு
நன்மைகள் செய்யும் என்று இருந்தோம்!
பலத்தினை இழக்கும்போதும்
பணிந்துசரண் கேட்டபோதும்
வழித்துணை யாருமின்றி
வாழ்க்கையைத் தொலைத்து விட்டோம்!
தோற்றுளோம் என்ற உண்மை
துன்பந்தான் என்ற போதும்
தோற்றதுஏற்று பிழைகள்
திருந்தலை மறந்து விட்டோம்
காட்டிலே கொஞ்ச மக்கள்
கண்ணீரில் கொஞ்ச மக்கள்
வீட்டிலே பிணமாய் நடந்து
வீழ்ந்துள்ள கொஞ்ச மக்கள்
கொஞ்சங்கள் கொஞ்சமாய்ச்சேர்ந்து
கூடுதல் ஆகிப்போச்சு!!!
மிஞ்சுயோர் காக்க இறைவா
மீண்டு நீ வருதல் வேண்டும்!!!
26 05 2010