கவிதை கேட்கும் வசதி

வாழ்த்துக் கவி கேட்க விரும்புபவர்களுக்கு கவிதை தரப்படும். மோருக்குப் பாடிய ஔவைபோல் இந்த ஊருக்கு பாடித்தர சிறு சன்மானம்.

பிறந்த நாள் வாழ்த்து, திருமண வாழ்த்து

இன்னும் பல







Paypal ஊடாக கொடுப்பனவு

தங்கள் விபரங்களை கவிதை தேவைப்படும் சந்தர்ப்பத்தை vajuguru@gmail.com என்ற முகவரிக்கு அறியத்தரவும். இரு வாரங்களுக்குள் கவிதை தங்களுக்கு மின்னஞ்சல் செய்யப்படும். தாங்கள் செய்த சன்மானத்தின் ஸ்கிறின் சொட் பிரதியை இணைக்க மறவாதீர்கள்.



வெள்ளி, மே 14, 2010

கட்டப் படுவது நானா?

சிறுத்தா(ல்)ள் இடையில் சிறுமி! - முத்தம்
சிணுங்கிக் கொடுக்கும் கருமி!
உரித்தால் பெருத்தாள் தெரியும் - சுவை
உவர்க்கும் இனிக்கும் அறியும்!

கேட்டால் மாட்டன் என்பாள் - நீ
கேடன் கள்ளன் என்பாள்
தோட்டா போல துளைத்து - உயிர்
துடைத்து வழித்துப் போவாள்.


கள்ளப் பார்வை பார்த்து - இதழ்
கசக்கும் என்பாள் வேர்த்து
வெள்ளம் ஏறிப்போச்சு - இனி
விளைநெல் பற்றிப் பேச்சு!

தலைக்கு மேலே வெள்ளம் -இனி
தலைப்பில் எனது உள்ளம்
வலைக்கு தப்பும் மீனா? - உனது
வழுக்கும் உடலும் தேனா?



கழுத்தில் கயிறு போட்டால்
கட்டப் படுவது நானா?
பழுத்த கனிகள் வீணா
பழுதடைய விடு வேனா?

14 05 2010