கவிதை கேட்கும் வசதி

வாழ்த்துக் கவி கேட்க விரும்புபவர்களுக்கு கவிதை தரப்படும். மோருக்குப் பாடிய ஔவைபோல் இந்த ஊருக்கு பாடித்தர சிறு சன்மானம்.

பிறந்த நாள் வாழ்த்து, திருமண வாழ்த்து

இன்னும் பல







Paypal ஊடாக கொடுப்பனவு

தங்கள் விபரங்களை கவிதை தேவைப்படும் சந்தர்ப்பத்தை vajuguru@gmail.com என்ற முகவரிக்கு அறியத்தரவும். இரு வாரங்களுக்குள் கவிதை தங்களுக்கு மின்னஞ்சல் செய்யப்படும். தாங்கள் செய்த சன்மானத்தின் ஸ்கிறின் சொட் பிரதியை இணைக்க மறவாதீர்கள்.



வெள்ளி, பிப்ரவரி 26, 2010

பித்துப் பிடிச்சிட்டு எனக்கு!

கட்டிப் பிடிக்கோணும்போல் இருக்கு- அவ
காதைக் கடிக்கணும்போல் இருக்கு!
குட்டி அழைக்கணும்போல் இருக்கு - சும்மா
கூட்டிக் கழிச்சுப் பார்! கணக்கு!

பட்ட கஷ்டங்கள் மறந்து- அந்தப்
பாவைப் பிள்ளையில் இருந்து
மொட்டு மலர்வது போல - காதல்
மூச்சு வருகுது மேலே!

கொட்டும் மழையெனக் கூதல் - அவ
கொவ்வை இதழ்களின் சாரல்
முட்டும் மலைகளில் மேகம் - குளிர்
முன்பனி தூவியே போகும்!

எட்டி நடக்கிறாள் கண்டு - இஞ்சை
ஏக்கத்தை மட்டுமே தந்து
வட்டி ஏறிச்சு மேலும் - கடன்
வந்து நெருக்குதே நாளும்!

நேற்றைய கனவிலே முத்தம் - ஓம்
நிச்சயம் இல்லையே சத்தம்
காற்றுடன் மட்டுமே சுற்றும் -ஒலி
காதலைச் சொல்லுமே நித்தம்!

எப்பத்தான் இறங்குமென் பித்தம்? - எனை
ஏற்றிடு ஏற்றிடு மட்டும்!
அப்பத்தான் மப்பெல்லாம் தீரும் - அன்பு
ஆளுமே வந்து நீர் பாரும்!!!!