கவிதை கேட்கும் வசதி

வாழ்த்துக் கவி கேட்க விரும்புபவர்களுக்கு கவிதை தரப்படும். மோருக்குப் பாடிய ஔவைபோல் இந்த ஊருக்கு பாடித்தர சிறு சன்மானம்.

பிறந்த நாள் வாழ்த்து, திருமண வாழ்த்து

இன்னும் பல







Paypal ஊடாக கொடுப்பனவு

தங்கள் விபரங்களை கவிதை தேவைப்படும் சந்தர்ப்பத்தை vajuguru@gmail.com என்ற முகவரிக்கு அறியத்தரவும். இரு வாரங்களுக்குள் கவிதை தங்களுக்கு மின்னஞ்சல் செய்யப்படும். தாங்கள் செய்த சன்மானத்தின் ஸ்கிறின் சொட் பிரதியை இணைக்க மறவாதீர்கள்.



புதன், ஏப்ரல் 21, 2010

வெக்ரர் எண்டா திசையும் பருமனும் இருக்கும்.

நாங்கள் திரும்பிப் பார்க்கிறனாங்கள் தான். பின்னையென்ன? இஞ்சை கவனிங்கோடா தம்பியவை என்று ஒரு குரல் சொல்லேக்கை கழுத்தை திருப்பி பார்க்காட்டா அவன் மனிசன் இல்லை கண்டியளோ! அனேகமாய் அது எங்கடை பக்கத்து வகுப்புத்தான். நாங்கள் உயிரியல். அந்த வகுப்பு மற்ஸ் காரரின்ரை. ஏல் ரியுசனெண்டா அப்பிடித்தான். ஒரு சின்னத்தட்டியாலைதான் வகுப்பு பிரிபட்டிருக்கும். அதாலைதான் எங்கடை காலத்திலை ரியுசனுக்கு கொட்டில்கள் என்ற பெயரும் இருந்தது. பழையாக்கள் சிலவேளை குழம்பிப் போவினம். அவையளுக்கு கொட்டில் என்றா கள்ளுக் கொட்டில்தான் விளங்கும்.


வேலாயுதம் எண்ட பெயர் கொமனோ தெரியாது. மணி ரியுசன் வேலாயுதம் மாஸ்டர் ( கனபேருக்கு அவரை கிளி மூக்கு எண்டாத் தான் தெரியும்) நிரு வேலாயுதம் மாஸ்டர் எண்டிருந்ததாலை இவரை வெக்ரர் வேலாயுதம் எண்டாத்தான் தெரியும்.

சயன்ஸ் ஹோல்தான் அப்ப யாழ்ப்பாண டவுணிலை சயன்சுக்கு இருந்த ஒரே ரியுசன். அதுக்கு பிறகு சின்னன் சின்னனா சிலது வந்தாலும் அதுதான் அப்ப ஏகபோகம். வெக்ரர் பக்கத்திலை வகுப்பெடுததா கணீரெண்டு இஞ்சாலையும் கேட்கும். எங்கடை வகுப்புக்கு வாத்தியார் இல்லாத நேரங்களிலை அல்லது அவையள் படிப்பிக்கிறது புரியாமல் அல்லது பிடியாமல் இருக்கிற நேர்த்திலை நாங்கள் வெக்ரரின்ரை வகுப்பைத்தான் வாய் பார்க்கிறது.

சிரியாதையுங்கோ! மற்ஸ் வகுப்பிலை அப்பிடியொண்டும் கிளியோபெற்றாக்கள் இருக்கேல்லை நாங்கள் திரும்பிப் பார்க்க. எங்கடை பயோ வகுப்புத்தான் தேவதைகளின்ரை இருப்பிடம். மற்ஸ்காரர்தான் எங்கடை வகுப்பை வாய் பார்க்கிறவை.

நானும் முதலிலை மற்ஸ் செய்யுறதெண்டுதான் இருந்தனான். உவங்கள் சொன்னாங்கள் மற்ஸ் வகுப்பெண்டா அது காய்ஞ்சு போய் இருக்கும். தவிர யுனிவேசிட்டிக்கு எடுபட்டு போனாலும் காய்ஞ்சு போய் இருக்கும் எண்டு! பேந்தேன் கரைச்சலை? உப்புடியொரு நிலைமையெண்டா பேந்தேன் மற்ஸ் படிப்பாண் எண்டுதான் பயோ படிச்சது.

நல்ல காலம். என்ரர் பண்ணியிட்டம். எங்கடை படிப்பின்ரை வள்ளலுக்குஏ எல் பாஸ் பண்ணுறதே பெரிய விசயம். இதிலை யுனி கிடைக்கிறதெண்டா.....
குண்டியிலை தட்டின புளுகம் பாருங்கோ. உதுக்கு ஒண்டும் செய்ய வேண்டாமே?
எங்கடை பட்ஜ் பாருங்கோ எல்லாத்தையும் வித்தியாசமா தான் யோசிக்கிறது. வழமையா என்ர பண்ணின பெடியள் தனித்தனிய தங்கடை சேர்மாருக்கு ஏதாவது வாங்கிக் குடுக்குறவைதானே. நாங்கள் எல்லாரும் சேர்ந்து எல்லா சேர்மாருக்கும் ஒன்றுகூடல் மாதிரி வைச்சு ஏதாவது செய்வம் எண்டு திட்டம் போட்டாச்சு.





திட்டம் போட்டா காணுமே? செய்யவேண்டாமே? அந்தமுறை இன்ஜினியரிங்கும் மெடிசினும் என்ரர் பண்ணுற ( அல்லது பண்ணக்கூடிய ரிசல்ட் இருக்கிற) எல்லாரும் சேந்து கூடிக் கதைச்சாச்சு. காசும் சேர்த்தாச்சு.

ஒன்று கூடல் ஒன்று இப்படி ஒரு தனியார் கல்வி நிலையத்தில் நடந்தது அதுதான் முதல்முறை என்று நினை்க்கிறன்.

எல்லாருக்கும் ஆச்சரியம். கெமிஸ்ரி மகாதேவா சேர் என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு என்று பாடியபோது! சும்மா வகுப்பிலை வேடிக்கை பார்த்தாலே ஜேஸ் இங்கு கவனிப்பது என்று சொல்லுற ஆள் எல்லே!

வெக்கர் அண்டைக்கு தம்பியவை கவனியுங்கோடா எண்டு சொல்லேல்லலை. ஆனா எல்லாரும் கவனிச்சவை. “நான் உங்களுக்கு இரண்டு விசயம்தான் சொல்லப்போறன் - வாழ்க்கையிலை மறக்காதையுங்கோ” என்றார். ஒன்று சிகரெட் பிடிக்க பழகாதையுங்கோ. மற்றது தண்ணியடிக்க பழகாதையுங்கோ- கனபேர் தொடங்கு தொடங்கு எண்ணுவாங்கள். தண்ணியடிக்கிற நான் சொல்லுறன் தண்ணி சிகரெட் பழகாதையுங்கோ!

வெக்ரர் நாங்கள் கொழும்பு வரமுன்னமே வீட்டிலை சறுக்கி விழுந்து அகாலமாய் போய்விட்டார். நாங்களும் செத்த வீட்டிற்கு போனனாங்கள். கனபேருக்கு கண்ணுக்கை தண்ணி!

கொழும்பிலை எல்லாக் கூத்தும் ஆடினனாங்கள். கனபேர் சோசலா தொடங்குறம் எண்டிட்டு கவிண்டும் விழுந்தவங்கள். ஆனா நாங்கள் தண்ணியோ சிகரெட்டோ மறந்தும் தொடேல்லை. கனபேர் இப்ப சொன்னாலும் நம்ப மாட்டாங்கள்.

வெக்ரர் என்றா பருமன் மட்டுமில்லை. திசையும் இருக்கும்.