கவிதை கேட்கும் வசதி

வாழ்த்துக் கவி கேட்க விரும்புபவர்களுக்கு கவிதை தரப்படும். மோருக்குப் பாடிய ஔவைபோல் இந்த ஊருக்கு பாடித்தர சிறு சன்மானம்.

பிறந்த நாள் வாழ்த்து, திருமண வாழ்த்து

இன்னும் பல







Paypal ஊடாக கொடுப்பனவு

தங்கள் விபரங்களை கவிதை தேவைப்படும் சந்தர்ப்பத்தை vajuguru@gmail.com என்ற முகவரிக்கு அறியத்தரவும். இரு வாரங்களுக்குள் கவிதை தங்களுக்கு மின்னஞ்சல் செய்யப்படும். தாங்கள் செய்த சன்மானத்தின் ஸ்கிறின் சொட் பிரதியை இணைக்க மறவாதீர்கள்.



வெள்ளி, மார்ச் 12, 2010

திரும்பிப் பாராளோ?!!!

வானம் இடிக்கின்ற போதும்
மழைதான் நனைக்கின்ற போதும்
தோகை மயில் நீயிருந்தால் -என்
துயரம் தொலைந்து போகும்!

அழவே துடிக்கின்ற கண்கள்
அதனை மறைக்கின்ற இமைகள்
அழகே நீயருகிருந்தால்
அகலும் துயர்கள் அகலும்!

விடிவாய் இருப்பாய் எனக்கு
விரைவில் பதிலை அனுப்பு
அடியே உனக்கேன் அலுப்பு?
அதனால் எனக்குச் சலிப்பு!!!

கசியும் குருதி மனதில்
கடின நிலையோ அதனில்!
மசியாதிருந்தால் அடியே -என்
மறைவு எதிரில் அறியே!


ஞாயிறு, மார்ச் 07, 2010

இருட்டுக் காதல்! திருட்டுக் காதல்!

கற்றதெல்லாம் போதும் நீயும்
கத்தி கொண்டு வா - கட்டை
கத்தரித்துப்போவோம் சொந்தப்
புத்தி கொண்டு வா

வெற்றுமேனி தொட்டு ஆட
வெட்கம் என்னடி! - அதை
விட்டு விட்டு வந்தால்
சொர்க்கம் கண்மணி!

வாழ்வு இன்ப வாழ்வு உந்தன்
வாயில் உள்ளது - அந்த
வாயில் திறந்து இருந்தல்- சயன
பாயில் நல்லது

ஆருமில்லா இரவு நீயும்
அருகில் ஓடி வா - சென்றி
ஆமி கூடத் தூக்கம்
அழகே ஓடிவா!

இருட்டில் நானும் சிரிப்பன்
எதுக்கு தெரியுமா?
எந்தன் பல்லு வெளிச்சம்
உனக்கு வழியம்மா!